வாங்க!!!! வாங்க!!!!

வாங்க!!!! வாங்க!!!!நீங்க வந்து படிக்கிறதுக்கு சந்தோசம்!!
நிறை குறை சொல்லிட்டு போனா ரொம்ப சந்தோசம்!

You tube Channel-->

Saturday, November 29, 2014

பாகம் -22

எந்நிலை மாறினும் தன்னிலை மாறா
மனிதரை காண்பது அரிது.
_____________________________________________________

நகைச்சுவை நோய் தீர்க்க நகையின்
சுவை நிதி தீர்க்கும்.
_____________________________________________________

பணத்துடன் பாவத்தை சேர்த்து வைத்தால்
பாவமே பணத்தை பறித்திடும்.
_____________________________________________________

சாபமும் சாதகமாய் மாறும் சாதுர்யமாய்
சாதிக்கும் சாமர்த்தியசாலி இடத்து.
_____________________________________________________

உடலை உருவாக்கும் உடலுக்கு உருவாக்கத்
தெரியும் நோயின் மருந்து.
_____________________________________________________

விடியா இரவென்றும் விலகா பிணியென்றும்
வாழ்வில் என்றும் இல்லை.
_____________________________________________________

இருந்தார் இறந்தா ராயினும் இருந்த
இருப்பால் இறந்தும் இருப்பர்.
_____________________________________________________

முடியாதென முடிவெடுத்த பின் முயலும்
முயற்சி முடிவை தரா.
_____________________________________________________

எழில்கண்டு செய்யும் தொழில்கண்டு பிறரை
மதித்தலும் மிதித்தலும் மடமை.
_____________________________________________________

பயமில்லா பகட்டில்லா பக்தி பெற்றிடும்
பரவசநிலை யெனும் முக்தி.
_____________________________________________________

No comments:

Post a Comment