வாங்க!!!! வாங்க!!!!

வாங்க!!!! வாங்க!!!!நீங்க வந்து படிக்கிறதுக்கு சந்தோசம்!!
நிறை குறை சொல்லிட்டு போனா ரொம்ப சந்தோசம்!

You tube Channel-->

Thursday, February 26, 2015

பாகம் -23

இன்பம் துன்பம் இரண்டும் அடுத்தவர்
தினிப்பன்று அவரவர் நினைப்பே.
_____________________________________________________

பரிட்சைக்கு பின் பாடம் புகட்டும்
பண்பட்ட ஆசிரியர் அனுபவம்.
_____________________________________________________
சொர்க்கம் கிடைக்க வேண்டி வாழ்வை
நரகமாக்கல் மனித மடமை.
_____________________________________________________
புரிந்த பிரியங்கள் பிரிந்திடின் புரிதலை
புரிய வைக்கும் பிரிவு.
_____________________________________________________
சலனமில்லா உடல் சவம் எனில்
மனமோ சிவ மாகும்.
_____________________________________________________
என்ன நடக்குமோ என்ற பயத்தினால்
எள்ளளவும் பலன் இல்லை.
_____________________________________________________
தன்னை தகர்க்கும் செயற்கைக்கும் கருப்பொருள்
தந்து உதவும் இயற்க்கை.
_____________________________________________________
கனவை கருக வைத்து குடும்பத்தை
கலங்க வைக்கும் கருச்சிதைவு.
_____________________________________________________
பசியில்லா உணவும் தோல்வியில்லா வெற்றியும்
என்றும் ருசிப்பது இல்லை.
_____________________________________________________
சில்லரை மனிதர்கள் வாங்க முடியாத
மொத்த வியாபாரம் நேர்மை.
_____________________________________________________

2 comments:

KILLERGEE Devakottai said...

அருமையான விடயங்கள் நண்பரே வாழ்த்துகள் நேரமிருப்பின் எமது ஏரியாவுக்கு(ம்) வாருங்கள் நன்றி

தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

KILLERGEE Devakottai said...

தமிழ் மணம் வாக்கு இட முடிய வில்லையே... நண்பா..

Post a Comment